மனைவி 20 பேருடன் கள்ளத் தொடர்பு; கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

0
888
20 Fake contact wife complaint Husband Police Station

தனது மனைவி கிராமத்திலுள்ள 20 நபர்களுடன் தொடர்புள்ளதனால் அவளுடன் குடும்பம் நடத்த முடியாதென 69 வயதான கணவன், 64 வயதான மனைவி தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார். (20 Fake contact wife complaint Husband Police Station)

ஏழு பிள்ளைகளின் தாயான 64 வயதுடைய தனது மனைவி, கிராமத்தில் உள்ள 20 நபர்களுடன் கள்ளத் தொடர்பு ஏற்படுத்தியுள்ளதனால் இனிமேலும் அவளுடம் குடும்பம் நடத்த முடியாது எனவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவளை விட்டு பிரிவதாகவும், உகன பொலிஸ் நிலையத்தில் தெரிவிப்பதற்கு வந்ததாகவும் 67 வயதுடைய நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தான் தனது வீட்டிற்குச் செல்லும் போதெல்லாம் தனது மனைவி தனது கள்ளக் காதலர்களை வீட்டிற்கு வரவழைப்பதாகவும், பலமுறை தான் இதனை நேரில் கண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனாலும் சட்டத்திற்கு இருக்கும் பயத்தினால் ஒருவரையும் தாக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதனை இந்த நபர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை வணங்கி தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களில் இவ்வாறான கள்ளத் தொடர்புகள் 20 பேரை தான் கையும் களவுமாக பிடித்துள்ளதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

வயதை கருத்திற்கொண்டாவது இவ்வாறான தவறுகளை தவிர்க்க எவ்வளவோ அறிவுறுத்தினாலும் இவள் இதனை பொருட்படுத்துவது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், 1990 ஆம் ஆண்டில் தனது 14 வயதுடைய மகள் ஒருவர் தனது தாயின் துர்நடத்தையைப் பொறுக்க முடியாது, தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அவர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

பொலிஸார் இந்த நபரின் மனைவியிடம் விசாரணை நடத்திய போது, தனது கணவன் தன்னை எப்போதும் சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தங்களின் மகள் தற்கொலை செய்துகொண்டது உண்மை எனவும் அவள் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி இந்த தம்பதிகளை அழைத்து மதத்திற்கு எற்ப நடந்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி அனுப்பியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 20 Fake contact wife complaint Husband Police Station