பயணச்சீட்டுக்களை வழங்கி பணத்தை திருப்பி பெற்றுக்கொள்ள முடியும்.!

0
449
sri lanka train tickets

முன்கூட்டிய புகையிரத பயணச்சீட்டுகளை பெற்று வேலை நிறுத்தம் காரணமாக பயணம் செய்ய முடியாமல் போனவர்களுடைய பயணசீட்டிற்கான பணத்தை மீள செலுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை புகையிரத சேவை தெரிவித்துள்ளது.(sri lanka train tickets,Sri Lanka 24 Hours Online Breaking News, News, Tamil web news, Tamilnews, Today Tamil News, )

கடந்த புதன்கிழமை முதல் நேற்று வரை இடம்பெற்ற வேலை நிறுத்தம் காரணமாக முன்கூட்டிய புகையிரத பயணச்சீட்டுகளை பெற்ற அதிகளவான பயணிகளுக்கு தங்களது பயணங்களை மேற்கொள்ள முடியாமல் போயிருந்தது.

இவர்களுக்குள் அதிகளவான வௌிநாட்டவர்களும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

அதனடிப்படையில் அவர்களுக்கு தங்களது பயணச்சீட்டுக்களை வழங்கி பணத்தை திருப்பி பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை, வேலைநிறுத்தம் இடம்பெற்ற காலத்தில் புகையிரத பயணச்சீட்டுக்களை பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் இலவசமாக பயணிக்க வசதிகள் வழங்கப்பட்டதனால் ஏற்பட்ட நட்டத்தை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 9 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் அதிகாரி பீ.எச்.ஆர்.டி சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையின் கோரிக்கை கிடைக்கப்பெற்றவுடன் குறித்த நட்டப்பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:sri lanka train tickets,Sri Lanka 24 Hours Online Breaking News, News, Tamil web news, Tamilnews, Today Tamil News,