65 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் இருவர் கைது

0
621
Two arrested gold biscuits worth 65 lakh rupees

சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்களை சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு கடத்தி வந்த இலங்கை பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். (Two arrested gold biscuits worth 65 lakh rupees)

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் குறித்த இருவரும் கைதுசெய்துள்ளனர்.

இன்று அதிகாலை சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு தங்க பிஸ்கட்களை கடத்தி வர முற்பட்ட வேளையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரையும் விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது, ஒருவரின் காற்சட்டை இடுப்புப் பட்டியில் தங்க பிஸ்கட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

அத்துடன், மற்றைய நபரின் பணப்பையில் குறித்த தங்க பிஸ்கட்கள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில், அவற்றை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

மாபாகே பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய நபரும் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய நபருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தங்க பிஸ்கட்டுகளின் பெறுமதி சுமார் 65 இலட்சம் ரூபா என்றும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Two arrested gold biscuits worth 65 lakh rupees