காட்டுக்குள் இரண்டு காதல் ஜோடிகள் செய்த செயல்

0
835
police arrested two love couples

காட்டுக்குள் மது அருந்திக் கொண்டிருந்த இரண்டு பெண்கள் உட்ட நான்கு பேரை கம்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர். (police arrested two love couples forest area)

காதலர்களுடன் சேர்ந்து கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுகளையுடைய இரு பெண்கள் மற்றும் 22 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு கைது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு காதல் ஜோடிகள் மகாவலி அணைக்கட்டுப் பிரதேசத்திற்குச் செல்லும் வழியில் உள்ள காட்டுப் பகுதிக்குள் இருந்து மது அருந்துவதாக கம்பளை பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைக்கப்பெற்றது.

இந்த தகவலை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, இரண்டு காதல் ஜோடிகளும் மது அருந்திக் கொண்டிருந்த நிலையில் அவர்களை கைது செய்துள்ளனர்.

இதன் பின்னர் இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர், கடும் எச்சரிக்கைக்குப் பின்னர் குறித்த காதல் ஜோடிகளை பொலிஸார் விடுவித்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; police arrested two love couples forest area