கலைஞருக்கு அஞ்சலி செலுத்த திருச்சிலிருந்து வந்த 80 வயது மூதாட்டி

0
640
india tamil news 80-year-old woman tirchy pay homage artist

தி.மு.க. தலைவர் கலைஞரின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.india tamil news 80-year-old woman tirchy pay homage artist

உடல் அடக்கம் செய்யப்பட்ட நாளில் இருந்து தி.மு.க.வினரும், பொதுமக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

3-வது நாளான இன்று தி.மு.க. மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் அதிக அளவில் வந்து அஞ்சலி செலுத்தினர். பெரும்பாலான பெண்கள் கருப்பு சேலை அணிந்து வந்திருந்தனர்.

திருச்சியில் இருந்து 80 வயதான வடுவச்சி அம்மாள் என்ற மூதாட்டி, கலைருக்கு அஞ்சலி செலுத்த வந்தார்.

நடக்க முடியாத அவரை அவரது மகனும், உறவினர் ஒருவரும் அழைத்து வந்திருந்திருந்தனர். கடந்த 7ஆம் தேதியிலிருந்து சென்னை வர வேண்டும்.

தலைவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கூறி வந்தார். நாங்கள்தான் கூட்டத்தில் நெருக்க முடியாது, இரண்டு நாள் கழித்து நினைவிடத்திற்கு அழைத்துச் செல்கிறோம் என்று கூறி தற்போது அழைத்து வந்தோம் என்று வடுவச்சி அம்மாள் மகன் தெரிவித்தார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :