புகையிரத ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு தொடரும்!

0
396

புகையிரத ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு சம்பந்தமாக அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கம், சாரதிகள் சங்கம், கண்காணிப்பாளர்கள் சங்கம் மற்றும் இயந்திர மேற்பார்வையாளர்கள் சங்கம் இணைந்து நேற்று பிற்பகல் 3 மணியளவில் திடீர் பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தை மேற்கொண்டமையினால் புறக்கோட்டை ரயில் நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. Sri Lanka Railway Staff Strike Continue Tamil News

புகையிர பணியாளர்கள் முன்னெடுத்து வரும் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டமானது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என புகையிரத தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோட்டை புகையிரத நிலையப்பகுதியில் நேற்று மாலை பெரும் பதற்றநிலை ஏற்பட்டது. மாலை முதல் இரவு வரை இந்த நிலைமை நீடித்தது.

பொதுமக்கள் புகையிரத நிலைய அதிகாரிகளுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர். புகையிரதநிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோட்டை புகையிரத நிலையத்திற்குள் புகுந்து புகையிரத நிலைய அதிபரின் காரியாலயம் மீதும் தாக்குதல் மேற்கொண்டனர்.

ரயில் நிலைய பொறுப்பதிகாரியின் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

பயணிகளின் ஆர்ப்பாட்டத்தினால் புறக்கோட்டை ஒல்கோட் மாவத்தை மற்றும் அதற்கு அண்டிய பிரதேசங்களில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது.

ஆனாலும் தமது சம்பள பிரச்சினைக்கு முறையான தீர்வொன்றை தெரிவிக்கும்வரையில் இந்த வேலை நிறுத்தம் இடம்பெறும் என்று புகையிரத சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்தார்.

அத்துடன் நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ரயில்வே ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு சம்பந்தமாக தீர்மானம் எடுக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலே இந்த திடீர் போராட்டத்தை ஆரம்பித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites