பொதுமக்களே அவதானம் ; சந்தையில் நிறமூட்டப்பட்ட பருப்பு வகைகள் விற்பனை

0
658
 Attention civilians pigmented pulses sold market

நிறமூட்டப்பட்ட மற்றும் தரமில்லாத பருப்பு வகைகள், தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. (Attention civilians pigmented pulses sold market)

கம்பஹா, இரத்தினபுரி மாவட்டங்கள் உள்ளிட்ட பல பிரதேசங்களில் இவ்வாறான தரமற்ற மற்றும் நிறமூட்டப்பட்ட பருப்பு வகைள் விற்பனை செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளது.

இந்த பருப்பை கழுவும் போது நீர் சிவப்பு நிறமாக மாறுவதுடன், இந்தப் பருப்பு மிகவும் சிறியதாக காணப்படும்.

இந்தப் பருப்பை வேகவைக்க, வழமையை விட கூடுதலான நேரம் எடுக்கும் என்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுகுறித்து மக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்றும் இவ்வாறான பருப்பு வகைகள் தொடர்பாக, பிரதேசத்தில் உள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு உடனடியாக முறைப்பாடுகளைத் தெரிவிக்க முடியும் என்றும் அந்தச் சங்கம் பொதுமக்களை வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Attention civilians pigmented pulses sold market