ஹக்கீமுக்கு வந்த சோதனை – தொலைபேசி ரகசிய கண்காணிப்பு செய்ய வேண்டியவர்களின் பட்டியலில் உள்ளடக்கம்

0
393
sri-lanka-government-decide-secrete-record-calls-rauf-hekeem

(sri lanka government decide secrete record calls rauf hekeem)

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆகியன இணைந்து உருவாக்கிய தேசிய அரசாங்கம், தனது இறுதி காலத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில், எதிர் கட்சியினரை மட்டுமல்லாது, அரசாங்கத்தை விமர்சிக்கும் தரப்பினரின் கைத்தொலைபேசி அழைப்புகளை ரகசியமாக ஒட்டுக்கேட்க ஆரம்பித்துள்ளதாக, ஒன்றிணைந்த எதிரணி குற்றம்சுமத்தியுள்ளது.

இதனிடையே ரகசிய ஒட்டுகேட்கப்பட வேண்டியவர்களின் பட்டியலில், அமைச்சர் ரவுப் ஹக்கீமின் தொலைபேசி அழைப்புகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் இன்று 08 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இவ்வாறு தொலைபேசி அழைப்புகளை இரகசியமாக ஒட்டுக்கேட்பதற்கான பொலிஸ் குழுவொன்றை இந்த அரசாங்கம் நுகேகொடவில் ஸ்தாபித்துள்ளது.

இதற்கான விசேட தொழிநுட்ப கருவிகளும் ஜப்பானிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

(sri lanka government decide secrete record calls rauf hekeem)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites