தமிழ் தலைமைகளுக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா அறிவுரை!

0
526
Deputy Muslim Minister Hizbullah Advices Tamil Political Parties

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் இந்த மண்ணிலே நிம்மதியோடு அரசியல் தீர்வு பெற்று வாழ வேண்டுமாக இருந்தால் முஸ்லிம்களின் அடிப்படைத் தேவைகள், மற்றும் அரசியல் உரிமைகளை மதிக்கின்ற சமூகமாக தமிழ் சமூகம் மாற வேண்டும் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். Deputy Muslim Minister Hizbullah Advices Tamil Political Parties Tamil News

மாறாக தமிழ் தலைமைகள் தமது அரசியல் சுயலாபங்களுக்காக தமிழ் பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள், கோஷங்கள், மற்றும் விமர்சனங்களை முன்வைப்பார்களேயானால் வடகிழக்குப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்றும் ஹிஸ்புல்லா வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதன் ஊடாக வடக்கு மற்றும் கிழக்கில் காணப்படுகின்ற பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் தாங்கள் உறுதியாக உள்ளோம்.

முஸ்லிம்களின் உணர்வுகளையும், மற்றும் உரிமைகளையும் ஒழித்து விட்டு அம்மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் வடக்கு மற்றும் கிழக்கு பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது.

எனவே இந்த விடயத்தில் தமிழ் தலைமைகள் மிகத்தெளிவாக இருக்க வேண்டும், முஸ்லிம்களின் உரிமைகளையும் பெற்றுக்கொடுப்பதற்கும், தேவைகளையும் நிவர்த்தி செய்வதற்கும் தமிழ் தலைமைகள் முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites