கருணாநிதியை சந்தித்த தயாளு அம்மா செய்த நெஞ்சை உறுக்கும் காரியம்!

0
911

கருணாநிதியின் இரண்டாவது மனைவியான தயாளு அம்மாளுக்கு, ஸ்டாலின், அழகிரி, செல்வி மற்றும் தமிழரசு என நான்கு பிள்ளைகள். Former Tamil Nadu Chief Minister Karunanidhi Health News Update Tamil News

கடந்த சில ஆண்டுகளாகவே மறதி நோயால் அவதிப்பட்டு வரும் தயாளு அம்மாவால் யாரையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லையாம்.

இதனால் வீட்டிலேயே முடங்கி கிடந்தவர், முதன்முறையாக நேற்று மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

கருணாநிதியின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்ட நிலையில், “அம்மாவை அழைத்து வாருங்கள், அப்பா வெயிட் பண்ணுவார்” என அழகிரி கூறினாராம்.

இதற்கு முதலில் தமிழரசு தயக்கம் காட்டினாலும், தன் மகன் தயா அழகிரியையும் அனுப்பி வைத்துள்ளார் அழகிரி.

இதன்பின்னர் தயாளு அம்மாளை கருணாநிதியின் சக்கர நாற்காலியில் அமரவைத்து, காரில் அழைத்து வந்துள்ளனர்.

கருணாநிதியை பார்த்ததும் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்த தயாளு அம்மாவின் கைகளை கருணாநிதியின் கைகளுடன் பற்றிக் கொள்ளச் செய்துள்ளார் அழகிரி.

இதனை பார்த்துக் கொண்டிருந்த குடும்ப உறவுகள் நெகிழ்ந்து போய் விட்டதாக தெரிகிறது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites