நண்பனின் காதலனை இரவு முழுவதும் பாலியல் துஷ்பிரயோகம் செய்த நம்பிக்கை துரோகி

0
1189
boyfriend's lover sexually abused throughout night

உடுபத்தாவை பிரதேசத்தை சேர்ந்த 15 வயது இளம் பெண் ஒருவர், கந்தயாய பிரதேசத்தை சேர்ந்த தனது காதலனை சந்திப்பதற்கு தும்மலசூரிய நகருக்குச் சென்றுள்ளார். (boyfriend’s lover sexually abused throughout night)

இரவு நேரமானதால் தனது வீட்டிற்குச் செல்வதற்கு முடியாது என தனது காதலனிடம் குறித்த பெண் கூறியுள்ளார்.

இதனையடுத்து, அவளின் காதலன் தனது நண்பனிடம், தனது காதலியை அவளின் வீட்டில் விட்டு வருவோம் எனக் கூறி, நண்பனின் மோட்டார் சைக்கிளில் தனது காதலியை பலவந்தமாக ஏற்றியுள்ளார்.

அத்துடன், காதலன் வேறொரு மோட்டார் சைக்கிளில் மற்றுமொறு நண்பருடன் இவர்களை பின்தொடர்ந்துள்ளார்.

குறித்த நண்பன் மோட்டார் சைக்கிளில் சென்ற நண்பர்களை வழிதவறச் செய்துவிட்டு, தும்மலசூரிய மற்றும் பிங்கிரிய பிரதான வீதியின் வதுவத்த என்ற மக்கள் நடமாட்டம் இல்லாத வீதியினூடாக அழைத்துச் சென்று ஒதுக்குபுறமாகவிருந்த பேரூந்து நிறுத்தும் கொட்டகையில் வைத்து தனது நண்பனின் காதலியை இரவு முழுவதும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதன்பின்னர் அதிகாலையில் அவளின் வீட்டருகே கொண்டுசென்று விட்டு தப்பியோடியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இந்தப் பெண்ணி தாயார் தும்மலசூரிய பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த பெண்ணின் காதலனையும் அவரின் நம்பிக்கை துரோகியான நண்பனையும் பொலிஸார் கைதுசெய்து குளியாப்பிட்டிய நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

அத்துடன், குறித்த பெண்ணை வைத்தியப் பரிசோதனைக்காக குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; boyfriend’s lover sexually abused throughout night