புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்

0
1386
scholarship exam girl sexal abused ambagamuwa

நாடளாவிய ரீதியில் நேற்று புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெற்றது. இதில் பல மாணவர்கள் சந்தோசமாக பங்கேற்று பரீட்சையை வெற்றிகரமாக எழுதி முடித்தனர்.(scholarship exam girl sexal abused ambagamuwa,Tamilnews)

எனினும் ஹம்பேகமுவ பகுதியில் கசப்பான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பரீட்சை இடம்பெறுவதற்கு முந்தைய நாள் (4), புலமைப்பரிசில் பரீட்சை எழுத தயாராக இருந்த சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சிறுமியின் சித்தப்பாவே இவ்வாறு சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

தனிப்பட்ட தேவைக்காக தாய் அயல் வீட்டுக்கு சென்றிருந்த போது, வீட்டுக்கு வந்த சித்தப்பா தனிமையில் இருந்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

சிறுமி வைத்திய பரிசோதனைக்காக கராபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான சித்தப்பாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மொனராகலை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:scholarship exam girl sexal abused ambagamuwa,scholarship exam girl sexal abused ambagamuwa,