புலமைப் பரிசில் பரீட்சைக்கு சென்றுகொண்டிருந்த தாய்க்கும் , மகளுக்கும் நேர்ந்த சோகம்

0
557
elephant attack one men die polanaruva latest news tamil

மஹியங்கனை, ஹத்தத்தாவ கிராமத்தில் பாடசாலை மாணவி ஒருவரும் தாயும் இன்று காலை காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். Wild Elephant Attack Scholarship Student

இதில் காயமடைந்த இருவரும் மஹியங்களை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று இடம்பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தாயுடன் சென்று கொண்டிருந்த போதே இருவரும் தாக்குதலுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

மஹியங்கனை, ஹத்தத்தாவ 80வது ஏக்கர் பிரதேசத்தில் வசிக்கும் சயுரி சத்சரனி என்ற மாணவியும் சேபாலிகா குமாரி (35) என்ற தாயுமே சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.

இருவரும் சென்று கொண்டிருக்கும் போது வீதியின் ஓரத்தில் இருந்த காட்டு யானை திடீரென இவர்களை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.