நாட்டில் எவ்வளவு பிரச்சனைகள் நடந்தாலும் எதிர்கட்சியான திமுக ஏன் அதனை எதிர்த்து கேள்வி கேட்பதில்லை என மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீப காலமாக சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வரும் நடிகர் அம்ன்சூர் அலிகான் காவிரி விவகாரம், ஸ்டெர்லைட் விவாகரம், 8 வழிச்சாலை ஆகியவற்றிற்கு எதிர்த்து குரல் கொடுத்ததால் அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில் தெருநாய்கள் என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய அவர் சினிமா துறை அழிவை நோக்கி செல்வதற்கு காரணமே இந்த மத்திய அரசின் பணமத்திப்பிழப்பு நடவடிக்கையாலும் ஜிஎஸ்டியலும் தான். பலர் சிறு தயாரிப்பாளர்கள் காணாமல் போய்விட்டனர்.
நாட்டில் இவ்வளவு பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கும் போதும் எதிர்க்கட்சிக்காரங்க ஏன் அமைதியா இருக்காங்க? இவ்வளவு எம்எல்ஏக்கள் இருந்தும் வாயே திறக்கலேன்னா எப்படி? அதுக்கும் காரணம் கமிஷன்தானா?
இனி யாரையும் நம்பி இருந்தால் ஆகாது எனவே எல்லா தமிழர்களும் ஒன்றிணைந்து தமிழர்ன்னு ஆட்சி அமைப்போம் என ஆவேசமாக பேசினார் மன்சூரலிகான்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- மாணவியை நிர்வாணமாக படமெடுத்து மிரட்டி படுக்கைக்கு அழைத்த ஆசிரியர்
- கை ராட்டை சுற்றிய நடிகர் மோகன்லால் – நோட்டீஸ் அனுப்பிய காதி நிறுவனம்
- மார்க்சிஸ்ட்டுகள் உருவாக்கிய புதிய போராட்ட வடிவம்
- தி.மு.க தலைவர் கருணாநிதியை நேரில் சென்று உடல்நலம் விசாரித்தார் கமலஹாசன் (காணொளி)
- எனக்கோ, என் கணவரின் உயிருக்கோ ஆபத்து நேரிட்டால் சசிகலா குடும்பமே பொறுப்பு : ஜெ.தீபா
- பிரபல மலையாள நடிகை சாலை விபத்தில் பலி…
- மகன் எடுத்த முடிவு : தாய் – தந்தை தூக்கிட்டு தற்கொலை