விமானத்தில் நின்று கொண்டு புத்தகயா செல்ல முயற்சித்த மூதாட்டி (உண்மைச் சம்பவம்)

0
445
woman asked fly standing air plane buddhagaya tamil news

(woman asked fly standing air plane buddhagaya tamil news)

தென்னிலங்கையில் பெண்ணொருவர் விமானத்தில் நின்று கொண்டு செல்வதற்கான விமான பயணச் சீட்டை கோரியுள்ளமை தெரியவந்துள்ளது.

அறியாமை காரணமாக பெண்ணொருவர் விநோதமான முறையில் விமான பயண பதிவு மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தென்பகுதியை சேர்ந்த 65 வயதான பெண்ணொருவர் இவ்வாறு செய்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

விமானத்தில் நின்று கொண்டு பயணம் செய்வதற்காக பெண்ணொருவர் குறைந்த கட்டணத்தை செலுத்தியுள்ளார்.

வறுமையான குடும்பத்தை சேர்ந்த பெண்ணொருவர் இந்தியாவிலுள்ள புத்தகயாவுக்கு யாத்திரையில் ஈடுபட விருப்பம் கொண்டிருந்தார்.

இதற்காக சிறுகசிறுக பணம் சேகரித்துள்ளார்.

அதற்கமைய விமான பயணச் சீட்டு ஒன்றை பதிவு செய்து கொள்ள முகவர் நிலையம் ஒன்றுக்கு சென்றுள்ளார்.

முதன்முறையாக வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொள்ள எண்ணிய பெண்ணுக்கு அது தொடர்பான போதிய விளக்கம் இருக்கவில்லை.

விமான பயணச் சீட்டு குறித்து விசாரித்துள்ளார். 75 ஆயிரம் ரூபா என அதிகாரி கூறியுள்ளார்.

விமானத்தில் அமர்ந்து செல்வதற்காகவா இவ்வளவு தொகை? என பெண்மணி ஆர்வமாக கேட்டுள்ளார்.

ஆம் என்ற அதிகாரிகளின் பதிலை கேட்டவுடன், 40000 ரூபா பணத்தை அவர் செலுத்தியுள்ளார்.

பயணச் சீட்டுக்கான மிகுதி 35000 ரூபா பணத்தை அதிகாரிகள் கோரியுள்ளனர்.

தன்னிடம் இவ்வளவு தான் பணம் உள்ளது. அரை மணித்தியாலம் விமானத்தில் நின்று கொண்டு பயணிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரின் பதிலை கேட்டு அதிர்ந்து போன அதிகாரிகள், பெண்ணின் அறியாமையை பக்குவமாக தெளிவுபடுத்தியுள்ளனர்.

குறித்த பெண்மணியின் அறியாமையை எண்ணிய அதிகாரிகள் கவலை அடைந்ததுடன், தங்களால் உதவ முடியாது என தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்த பெண்மணி, மிகுந்த ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளார்.

(woman asked fly standing air plane buddhagaya tamil news)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites