கணவர்கள் இருக்கும் போதே வடக்கு பெண்கள் தாலியை கழட்டுகிறார்கள் : விஜயகலா மீண்டும் அதிரடி

0
922
vijayakala maheswaran statement drugs smuggling

வடக்கில் முன்னைய காலங்களில் பெண்கள் கணவர் இல்லாத சந்தர்ப்பத்தில்தான் தாலியை கழட்டுவார்கள். ஆனால் இப்போது கணவர் இருக்கும் போதே தாலியை கழட்ட வேண்டிய அச்சநிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.(vijayakala maheswaran statement drugs smuggling,Tamilnews, Srilanka Tamilnews)

கிளிநொச்சி, உருத்திரபுரம் விளையாட்டு கழகத்தில் இடம்பெற்ற உதைப்பந்தாட்ட கிண்ண அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

முன்னைய காலங்களில் இரவு 12 மணிக்கும் பெண்கள் சுதந்திரமாக நடமாடிய சூழல் காணப்பட்டது. ஆனால் தற்போது பகல் 12 மணிக்கும் சுதந்திரமாக செல்ல முடிவதில்லை. அண்மையில் நிகழ்வொன்றிற்கு சென்றிருந்தேன்.

நிகழ்வின் நிறைவில் தமது தங்க ஆபரணங்களை பெண்கள் கழற்றி பாதுகாப்பதை அவதானித்தேன்.

முன்னைய காலங்களில் பெண்கள் கணவர் இல்லாத சந்தர்ப்பத்தில்தான் தாலியை கழட்டுவார்கள். ஆனால் இப்போது கணவர் இருக்கும் போதே தாலியை கழட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் போதைப்பொருட்கள் தென்னிலங்கையிலிருந்தே வடக்கிற்கு வழங்கப்படுகின்றது. இதனால் இளைஞர், யுவதிகள் விழிப்பாக இருக்க வேண்டும் என்றார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:vijayakala maheswaran statement drugs smuggling,vijayakala maheswaran statement drugs smuggling,vijayakala maheswaran statement drugs smuggling,