ஐந்து மாதங்களாக சிறுமியை அச்சுறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் – பொலிஸ் உத்தியோகத்தர் கைது

0
554
sixteen years old girl abuse last five months trincomale uppuveli police

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அபேபுர பிரதேசத்தில் சிறுமி ஒருவரை பாலியல் துஷபிரயோகம் செய்த நபர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். sixteen years old girl abuse last five months trincomale uppuveli police

இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியை சேரந்;த 16 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு பாலியல் துஷ்பியோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

உப்புவெளி பொலிஸ் நிலையத்தி போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் 27 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியின் நிர்வாண புகைப்படம் ஒன்றினை காண்பித்து அச்சுறுத்தி கடந்த மார்ச் மாதத்திலிருந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரும் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட சிறுமியும் அயல் வீடுகளில் வசிப்பவர்கள் என்பது குறிப்படத்தக்கது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
sixteen years old girl abuse last five months trincomale uppuveli police

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites