ரவிராஜ் படுகொலை தீர்ப்பு : மேன்முறையீட்டு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது!

0
426
Tamil Politician Raviraj Murder Case

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆறு எதிரிகளையும் கொழும்பு மேல் நீதிமன்றம் விடுதலை செய்திருந்தது. Tamil Politician Raviraj Murder Case Tamil News

தற்போது இந்த தீர்ப்புக்கு எதிராக, தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக, படுகொலை செய்யப்பட்ட ரவிராஜின், மனைவி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இதனைத் தொடர்ந்து விசாரிக்க முடிவு செய்திருப்பதுடன், வழக்கை, டிசெம்பர் 4ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.

இந்த வழக்கை, நீதியரசர்கள் தீபாலி விஜேசுந்தர மற்றும், அசல வேங்கப்புலி ஆகியோர் விசாரணைக்கு எடுத்திருந்தனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites