மோதரையில் சற்றுமுன்னர் துப்பாக்கி சூடு

0
610
minuvangoda gun fire one men spot die suspect escape Lankan police

கொழும்பு, முகத்துவாரம், முத்துவெல்ல மாவத்தையில், சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில், படுகாயமடைந்த கோபாலபிள்ளை பாலச்சந்திரன் (வயது 62) என்பவர் மரணமடைந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மரணமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவரே, அவர் மீது சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனரென, ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் மரணமடைந்தவர், பொலிஸாரினால் தேடப்பட்டுவரும் குக்குடி கண்ணா என்பவரின் தந்தையென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:shooting down Muthuwella Mawatha,shooting down Muthuwella Mawathashooting down Muthuwella Mawatha