திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க நாளை மறுநாள் சென்னை வருகிறார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.india tamilnews visit republican leader inquire karunanidhi’s health
வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த சில நாட்களாக மருத்துவ கண்கானிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூலை 27-ஆம் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தலைவர் கருணாநிதி அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
காவிரி மருத்துவமனையில் மருத்துவ கண்கானிப்பில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதி அவர்களை தலைவர்கள் பலரும் சந்தித்து வருகின்றனர்.
தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கருணாநிதி உடல் நலம்பெற வேண்டும் என பிராத்தனை செய்து வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிய தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்கு படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு அவர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள், மலேசியா சட்டமன்ற உறுப்பினர், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர், தமிழ் திரையுலக நடிகர்கள், கேரளா முதல்வர் பினராயி விஜயன் என பலரும் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்து கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல்நலம் குறித்து கேட்றிந்தனர்.
இதையடுத்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவிரி மருத்துவமனைக்கு நாளை மறுநாள் (ஆகஸ்ட் 5 ஆம் தேதி) சென்னை வருகிறார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.
இதை தொடர்ந்து மருத்துவமனையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- ஓடும் மின்சார ரயிலில் பாம்பு : பயணிகள் பயந்து அலறல்
- சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதை எதிர்த்து ட்ராபிக் ராமசாமி குரல்
- வீட்டிலேயே சுகப்பிரசவம் பயிற்சி : விளம்பரம் செய்த ஹீலர் பாஸ்கர் கைது
- திருமணம் ஆசையில் காதலி : நண்பர்களோடு சேர்ந்து கற்பழித்த காதலன்
- அக்காவை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்ற தம்பி : நடந்தது என்ன?
- மனைவி தற்கொலை செய்வதை வீடியோ எடுத்து வெளியிட்ட கணவன் : அதிர்ச்சி காணொளி
- சொத்துக்காக தாயின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்
- கார் இல்லாமல் வாழலாம் : நீரும், சோறும் இல்லாமல் வாழ முடியாது – சீமான் (காணொளி)
- இறந்துபோன பெண்ணின் உடலை சைக்கிளில் கட்டி எடுத்துச்சென்ற உறவினர்
- பேராசிரியை நிர்மலா தேவிக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு