எந்த நிறுவனமும் இதுவரை அடையாத இமாலய இலக்கை அடைந்தது ஆப்பிள்

0
800

உலகிலேயே ஒரு டிரில்லியன் டொலர் மதிப்பை எட்டிய முதல் நிறுவனம் என்ற பெருமையை ஆப்பிள் நிறுவனம் பெற்றுள்ளது. Apple Trillion Dollor Tamil News

ஆப்பிள் நிறுவனப் பங்குகள் 201.05 டொலர் என்ற அளவை எட்டியபோது அந்த நிறுவனத்தின் மதிப்பு ஒரு டிரில்லியன் டொலர் மதிப்புள்ளதாக உயர்ந்தது. 42 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஆப்பிள் நிறுவனம், கடந்த 1997ம் ஆம் ஆண்டில் திவாலாகும் நிலையில் இருந்தது. அந்த நிறுவனத்தை தொடங்கிய இருவரில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸை மீண்டும் நிறுவனத்திற்குள் கொண்டு வந்ததே நிறுவனம் மீண்டும் வளர்ச்சியடைய காரணமாக இருந்தது. மக்கள் மத்தியில் பிரபலமான ஐபோன், ஐபேட் போன்றவற்றை அறிமுகப்படுத்திய பெறுமை ஸ்டீவ் ஜாப்ஸையே சேரும் இந்த நவீன கருவிகளே ஆப்பிளின் அசுர வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தன.

ஆப்பிள் இன்க் நிறுவன மதிப்பு ஒரு லட்சம் கோடி டொலர்களை கடந்ததையொட்டி, அந்நிறுவன ஊழியர்களுக்கு ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

“இன்று ஆப்பிள் நிறுவனம் குறிப்பிடத்தக்க மைல்கல்லை கடந்துள்ளது. வியாழக்கிழமை பங்குச் சந்தை நிறைவின் போது ஆப்பிள் பங்குகளின் விலை 207.39 டொலர்களாக இருந்தது, அதன்படி ஆப்பிள் மதிப்பு ஒரு டிரில்லியன் டொலர்களாக உள்ளது. நாம் பெருமை கொள்ள பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன, இது நம் வெற்றியின் மிக முக்கிய அங்கம் கிடையாது. ஆப்பிள் நிறுவன புதுமை, நம் சாதனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை, நம் மதிப்புகளுக்கு எப்போதும் உண்மையாக இருப்பதற்கான வெளிப்பாடாக நிதிநிலை அறிக்கைகள் இருக்கின்றன.”

“மிகப்பெரும் சவால்களையும் மனித ஆற்றலின் திறன் மூலம் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் தான் ஸ்டீவ் ஆப்பிள் நிறுவனத்தை துவங்கினார். உலகை மாற்ற வித்தியாசமாக நினைப்பவர்களே அவற்றை செய்து முடிக்கின்றனர். இன்றைய உலகில், நம் இலக்கு இதுவரை இருந்ததில், மிகமுக்கியமான ஒன்று ஆகும். நம் சாதனங்கள் சுவாரஸ்யம் மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துகிறது.

இதுபோன்ற சூழ்நிலைகளில் ஸ்டீவ் செய்ததை போன்றே, நாம் ஆப்பிள் நிறுவனத்தின் பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்தும் நோக்கில், நமது பணியை ஒன்றிணைந்து சிறப்பாக செய்ய வேண்டும்.”