(Prison safe place drug traffickers Ranjith Madduma Bandara)
சட்டவிரோதமாக போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு தமது விற்பனையை மேற்கொள்ள சிறைச்சாலையே பாதுகாப்பான இடமாக மாறியுள்ளது.
அங்கிருந்து போதைப்பொருள் வியாபாரத்தை கையாள்வது மிக சுலபமான விடயம் என்று அரச நிர்வாக முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (01) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன் போதைப்பொருள் விற்பனையாளர்கள் அரசாங்கத்தில் இருப்பவர்களுடன் தான் தொடர்புகளை வைத்திருந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் பணியினை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
கடந்த ஆட்சியின் போது இவ்வாறான சட்டவிரேத கும்பல்கள் கைது செய்யப்படவில்லை எனவும் அவ்வாறு கைது செய்யப்படுபவர்களையும் அரசாங்கத்தில் இருக்கும் முக்கிய புள்ளிகள் காப்பாற்றி விடுவதாகவும் அமைச்சர் குற்றம்சுமத்தினார்.
(Prison safe place drug traffickers Ranjith Madduma Bandara)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நற்செய்தி; வட்டி இல்லாத கடன் வசதிகள்
- கிளிநொச்சியில் கொய்யாமரத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றினால் சிறுவன் பலி
- 60 வயது தந்தையை 25 வயதுடைய பெண்ணுடன் சேர்த்து வைத்த பிள்ளைகள்
- கள்ளக் காதலியை வெட்டிக் கொலை செய்த நபர் வசமாக மாட்டினார்
- பொகவந்தலாவையில் தோட்ட உத்தியோகஸ்தர்கள் ஆர்ப்பாட்டம்
- வாகனங்களின் விலை மீண்டும் அதிகரிப்பு
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்