(Grade 5 scholarship set held 5th August Examination Department)
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் எதிர்வரும் 5 ஆம் திகதி நாடளாவிய ரீதியாகவுள்ள 3050 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தமுறை பரீட்சைக்காக 355,326 விண்ணப்பதாரிகள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
முதலாவது பரீட்சை வினாத்தாள் காலை 9.30 மணி முத ல் 45 நிமிடங்கள் நடைபெறவுள்ளதுடன் இரண்டாவது பரீட்சை வினாத்தாள் 10.45 மணி முதல் ஒரு மணித்தியாளயமும் 15 நிமிடங்களும் நடைபெறவுள்ளது.
இதனால் பரீட்சார்த்திகள் உரிய நேர காலத்துடன் பரீட்சை நிலையங்களுக்கு வருமாறும் காலை 9 மணியாகும் போது ஆசனங்களில் அமர்ந்து கொள்ளுமாறும் பரீட்சை ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்து பரீட்சார்த்திகளும் தங்களுடைய பரீட்சை இலக்கங்களை சீருடையின் இடது பக்கத்தில் பதிந்து கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், பரீட்சார்த்திகளின் பெற்றோர் பரீட்சை நடைபெறும் இடங்களுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்தார்.
(Grade 5 scholarship set held 5th August Examination Department)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நற்செய்தி; வட்டி இல்லாத கடன் வசதிகள்
- கிளிநொச்சியில் கொய்யாமரத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றினால் சிறுவன் பலி
- 60 வயது தந்தையை 25 வயதுடைய பெண்ணுடன் சேர்த்து வைத்த பிள்ளைகள்
- கள்ளக் காதலியை வெட்டிக் கொலை செய்த நபர் வசமாக மாட்டினார்
- பொகவந்தலாவையில் தோட்ட உத்தியோகஸ்தர்கள் ஆர்ப்பாட்டம்
- வாகனங்களின் விலை மீண்டும் அதிகரிப்பு
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்