80 பறவைகளை கைப்பைக்குள் வைத்து கடத்திய நபர்!

0
368
80 birds smuggle person arrested Roissy 

ஒஸ்ரியா நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் சாள்-து-கோல் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கைப்பையில் 80 பறவைகளை கொண்டுவந்த காரணத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். 80 birds smuggle person arrested Roissy 

கடந்த வெள்ளிக்கிழமை ஜூலை 27 ஆம் திகதி, நபர் ஒருவர் 5 கைப்பைகளுடன் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அதில் மூன்றுக்குள் விதம் விதமான 80 பறவைகளை கொண்டு வந்துள்ளார். அவர் மொத்தமாக 15 சிறிய ரக பெட்டிகளை பைக்குள் வைத்திருந்துள்ளார். கொண்டுவந்த 80 பறவைகளில் 79 பறவைகள் உயிருடன் இருந்துள்ளன. அந்த நபர் சுங்கவரி அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஜெர்மனியில் வசிக்கும் அவர் ஒஸ்ரியா நாட்டைச் சேர்ந்தவராகும். குறித்த நபர் ஒரு பறவைகள் ஆர்வலர் என தெரியவந்துள்ளது. இதே போன்ற ஒரு குற்றத்துக்காக இதற்கு முன்னதாக ஜெர்மனியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்ததார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் இது குறித்த தகவல் இன்றே வெளியாகியுள்ளது. தற்போது, மீட்கப்பட்ட பறவைகளில் 20க்கும் குறைவான பறவைகளே உயிருடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tags :- 80 birds smuggle person arrested Roissy

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்