மன்னார்- மடுத் தேவாலயப் பகுதியைப் புனித பிரதேசமாக பிரகடனம் செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த யோசனைக்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று அனுமதி அளித்துள்ளது. President Maithripala Sirisena’s Madu Church Pradesh Plan Tamil News
புனித பிரதேசமாக பிரகடனம் செய்யப்படும் முதலாவது கத்தோலிக்கத் தேவாலயமான மடு அன்னையின் தேவாலயம் 400 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்தாகும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 29ஆம் திகதி மடு அன்னையின் தேவாலயத்துக்கு தனது குடும்பத்தினருடன் பயணம் மேற்கொண்டிருந்தார். அதன் பின்னரே அவர் இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
மடு அன்னையின் தேவாலயத்தில் நடக்கும் திருவிழாக்களில், நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடுவது வழக்கமாகும்.
இதன் அடிப்படையில் புனித பிரதேசமாக பிரகடனம் செய்யப்படும் பட்சத்தில் மடு தேவாலயப் பகுதிக்கான வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு, போக்குவரத்து வசதிகள் அதிகரிக்கப்படும். நீர் விநியோகம், சுகாதாரம், தங்குமிட வசதி, மற்றும் ஏனைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டத்தையும் மைத்திரிபால சிறிசேன முன்வைத்துள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வடமராட்சியில் மீனவரின் படகை தீ வைத்த விஷமிகள்
- மத்தல விமான நிலையத்தினால் மாதாந்தம் 2500 இலட்சம் ரூபா செலவு
- வெளிநாடுகளுக்கு சென்று திரும்பாத பேராசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
- கள்ளக் காதலியை வெட்டிக் கொலை செய்த நபர் வசமாக மாட்டினார்
- மாணவர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி; இரண்டாம் தவணை நிறைவு
- கேப்பாப்புலவு இராணுவ முகாம் முன்பாகவிருந்த பெட்டிக்கடை அகற்றல்
- பாலத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு