60 வயது தந்தையை 25 வயதுடைய பெண்ணுடன் சேர்த்து வைத்த பிள்ளைகள்

0
1001
60 year old father married 25 year old girl

25 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த 60 வயதுடைய தகப்பனை அவரின் திருமணமான பிள்ளைகள், இருவரையும் பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் உஹனையில் இடம்பெற்றுள்ளது. (60 year old father married 25 year old girl)

60 வயதுடைய தகப்பனின் மூன்று மகன்மார்களும் மணமுடித்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் நிலையில், அவர்களின் தந்தை கணவனை விட்டுப் பிரிந்து வாழும் 25 வயதான இரு பிள்ளைகளின் தாயுடன் சில காலமாக கள்ளத் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்த 60 வயது நபரின் மகன்மார்களும் அவர்களின் மனைவியும் இவர்கள் இருவரிடமும் இந்த கள்ளத் தொடர்பை நிறுத்துமாறு பலமுறை கூறியுள்ளனர்.

எனினும் இவர்களின் அறிவுறுத்தலுக்கு செவி சாய்க்காது கள்ளத்தொடர்பை தொடர்ந்துள்ளனர்.

தங்களின் தந்தை குறித்த 25 வயது பெண்ணின் இல்லத்தில் ஒன்றாக இருப்பதாக கேள்விப்பட்ட இவரின் மகன்கள், தங்களின் தாயுடன் சென்று இந்த பெண்ணின் வீட்டின் கதவை உடைத்து இருவரையும் பிடித்து 119 அவசர சேவைக்கு அழைத்துள்ளனர்.

உடனே அங்கு சென்ற பொலிஸ் குழுவிடம் இவர்களை ஒப்படைத்துள்ளனர். உஹன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, 60 வயதுடைய நபரிடம் இந்தக் கள்ளத் தொடர்பை நிறுத்துமாறும் அவரின் சொந்த மனைவியுடன் செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

இதனை ஏற்காத இந்த நபர் 25 வயதுடைய பெண்ணை தன்னால் மறக்க முடியாது எனவும் இந்தப் பெண்ணுடன் குடும்பம் நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

வேறு வழியில்லாது இவர்கள் தங்களின் தந்தையின் விருப்பத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். அத்துடன், உடைத்த கதவை திருத்தித் தருமாறு 25 வயதுடைய பெண் கேட்டுள்ளார். இவரின் மகன்மார் இதனை நிராகரித்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 60 year old father married 25 year old girl