(TAMIL NEWS karunanidhi taken special ward couvery hospital)
இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக தொற்று காரணமாக காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரபரப்பட்டு வந்தன.
காவிரி மருத்துவமனைக்கு கருணாநிதியின் உறவினர்கள் அனைவரும் விரைந்தது மற்றும் பொலிஸாரின் திடீர் பாதுகாப்பு ஏற்பாடுகளால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே, கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கருணாநிதியின் உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டதாகவும் சிகிச்சை பிறகு அவரது உடல்நிலை சீராகி வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மருத்துவமனைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா, ‘கருணாநிதியின் உடல்நிலையில் சிறிது நேரம் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டது மருத்துவர்களின் தீவிர சிகிச்சையின் காரணமாக அவர் உடல்நிலை சீராகி வருகிறது.
தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எனவே, தி.மு.க தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்’ என அவர் தெரிவித்தார்.
அதேவேளை, மருத்துவமனைக்குள் விசேட சிகிச்சைக்காக திமுக தலைவர் கருணாநிதி நோயாளர் கட்டிலில் வைத்து அழைத்துச் செல்லப்படும் காட்சி செய்தியாளர் ஒருவரின் கமராவில் பதிவாகியுள்ளது.
(TAMIL NEWS karunanidhi taken special ward couvery hospital)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கொழும்பில் இன்றைய தினம் மின்சாரத் தடை
- பாலியல் சர்ச்சை : ‘தான் விரும்பியே தனுஷ்க குணதிலகவுடன் ஹோட்டலில் தங்கினேன்” : நோர்வே பெண் வாக்குமூலம்
- பாலியல் விவகாரம்: ‘பிளே போய்’ வாழ்க்கை வாழும் தனுஷ்கவின் நண்பன்
- ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை