(TAMIL NEWS Karunanidhi taken Cauvery Hospital Gopalapuram SECVPF)
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதிக்கு நேற்று மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் காவேரி மருத்துவமனைக்கு நோயாளர் காவு வாகனம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்.
கோபாலபுரம் இல்லத்தில் இருந்து கருணாநிதியை காவேரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்
திராவிட முன்னேற்ற கழக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நேற்று முன்தினம் நலிவவடைந்தது.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் ஒரு பதற்றமான சூழல்நிலை ஏற்பட்டது.
கருணாநிதி பூரண நலம் பெற வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துச் செய்திகளையும் பிராத்தனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, நேற்று பிற்பகலுக்கு பின்னர் அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. காய்ச்சல் மற்றும் சிறுநீரகத் தொற்று படிப்படியாக குறைந்து வருவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.
இந்நிலையில், கருணாநிதிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. தகவலறிந்து ஆழ்வார்பேட்டை வீட்டில் இருந்து மு.க.ஸ்டாலின் மீண்டும் கோபாலபுரம் வீட்டுக்கு சென்றார்.
தனி மருத்துவர் கோபால் மற்றும் காவேரி மருத்துவமனையின் மருத்துவ குழுவினரும் வந்தனர்.
அதன்பின்னர், அவரை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. அங்கிருந்து நோயாளர் காவு வாகனம் வரவழைக்கப்பட்டது.
கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற உள்ளதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
(TAMIL NEWS Karunanidhi taken Cauvery Hospital Gopalapuram SECVPF)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- தூக்கு தண்டனை கைதிகளுக்கு விருந்தளிக்கப் போகும் ஜனாதிபதி..!
- பாலியல் சர்ச்சை : ‘தான் விரும்பியே தனுஷ்க குணதிலகவுடன் ஹோட்டலில் தங்கினேன்” : நோர்வே பெண் வாக்குமூலம்
- பாலியல் விவகாரம்: ‘பிளே போய்’ வாழ்க்கை வாழும் தனுஷ்கவின் நண்பன்
- ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
- மொனராகலையில் கொடூரம் : மாணவியை மாறி மாறி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர்கள்
- யாழில் குடும்பத் தலைவன் செய்த செயல் : வயிறு பெருத்து காணப்பட்டதால் நடந்த விபரீதம்