பட்டினியால் 3 சிறுமிகள் பலியான சம்பவத்தில் திடீர் திருப்பம்

0
507
batticollo vantharumoolai one men body recover room latest news

தொடர்ந்து 8 நாட்களாக உணவு உட்கொள்ளாமல் மரணமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகளின் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுமிகளுக்கு அவரது தந்தை ஏதோ ஒரு மருந்தை சுடு நீரில் கலந்து கொடுத்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. sudden death 3 girls samefamily died 8days eating indiatamilnews

பிரேத பரிசோதனையில் தெரிய வந்திருக்கும் தகவலின்படி, மூன்று குழந்தைகளுக்கும் வயிற்றுப் போக்கும், வாந்தியும் ஏற்பட்டுள்ளது. குழந்தைகளின் உடல்நிலை மோசமடைந்த போது அவர்களுக்கு உரிய சிகிச்சையோ, மருந்தோ, உணவோ அளிக்கப்படவில்லை. இதனால் அவர்களது உடலில் முழுவதும் நீர்ச்சத்துக் குறைந்து மரணம் ஏற்பட்டுள்ளது.

காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த முதல் குழந்தையின் பெயரில் இருக்கும் வங்கிக் கணக்கில் ரூ.1,805 ரூபாய் இருந்ததும் தெரிய வந்துள்ளது. எனவே, குடும்ப வறுமை காரணமாக இந்த மரணங்கள் நிகழவில்லை என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில், ஜூலை 23ம் தேதி இரவு, சிறுமிகளின் தந்தை மங்கள் சிங் ஏதோ ஒரு மருந்தை தனது மகள்களுக்குக் கொடுத்ததும், அதன் பிறகு அவர் தலைமறைவானதும் தெரிய வந்துள்ளது. sudden death 3 girls samefamily died 8days eating indiatamilnews

எனவே இந்த சம்பவம் குறித்த தீவிர விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.
பட்டினிச் சாவாகக் கருதப்பட்ட இந்த சம்பவத்தில், தந்தை கொடுத்த மருந்து விஷமா? என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites