மாத இறுதியில் “டுக் டுக்” முச்சக்கரவண்டி திட்டம்!

0
708

இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபையின் வழிகாட்டலில் “டுக் டுக்” முச்சக்கரவண்டி திட்டம் இந்த மாத இறுதியில் கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. Colombo Tuk Tuk Three Wheel Festival

இதன் தொடக்க விழா எதிர்வரும் 30 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளது.

இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபையானது சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பாதுகாப்பானதும், சினேக பூர்வமானதுமான முச்சக்கரவண்டி சவாரியை வழங்கும் நோக்கிலேயே முதல் முறையாக “டுக் டுக்” முச்சக்கரவண்டி திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த திட்டம் மூலம் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளும் இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகளும் நன்மை அடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites