அரசியலமைப்பில் மகிந்தருக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்- பௌத்தத்துக்கு முன்னுரிமை நடைமுறையில் உள்ளதா?

0
699
Priority Buddhism mentioned Constitution doubt Mahinda Rajapaksa

(Priority Buddhism mentioned Constitution doubt Mahinda Rajapaksa)

அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள பௌத்த மதத்துக்கான முன்னுரிமை தற்போது நடைமுறையில் உள்ளதா? என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிலியந்தலையில் இன்று மாலை இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

பௌத்த சமய பாடசாலை ஒன்றை ஆரம்பிக்க வேண்டுமாயின் அல்லது விகாரை ஒன்றைக் கட்டுவதாயின் பிரதேச சபையிலுள்ள சர்வமத தலைவர்கள் குழுவில் அனுமதி பெற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

அந்த குழுவிலுள்ள ஒரு சமயத்தைச் சேர்ந்தவர் பௌத்த சமய பாடசாலை அமைக்க விரும்பாவிடினும் அதனை அமைக்க முடியாத ஒரு நிலைமை தோன்றியுள்ளது.

இந்த நிலையில், அரசாங்கத்தினுடைய தற்போதைய நடவடிக்கைகளைப் பார்க்கும் போது அரசியல் யாப்பில் கூறப்பட்டுள்ள பௌத்த மதத்துக்கான முன்னுரிமை நடைமுறையில் இருக்கின்றதா? என்ற சந்தேகம் எழுகின்றதென்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

(Priority Buddhism mentioned Constitution doubt Mahinda Rajapaksa)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites