இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கினார் யாழ். இளைஞர்

0
1502
Vijayakanth Viyaskanth

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் இன்று ஆரம்பமான பத்தொன்பதுக்கு வயதிற்குட்பட்ட இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் களமிறங்கியுள்ளார். (Vijayakanth Viyaskanth)

யாழ். மத்திய கல்லுரி மாணவனான விஜயகாந்த் வியாஸ்காந்த் என்பவரே இலங்கை பதினொருவர் அணியில் விளையாடுகிறார்.

வலது கை வெளியே திரும்பும் சுழல்பந்து வீச்சாளரான ஜயகாந்த் வியாஸ்காந்த், தொடர்ச்சியாக மேல், வடமத்திய மற்றும் வடமேல் மாகாண அணிகளுக்கு எதிராக சுழலில் அசத்தியவர் என்பதும் சிறப்பம்சமாகும். அத்தோடு தேவையான நேரத்தில் துடுப்பாடும் வல்லமையும் கொண்டவர்.

இந்நிலையில் முதலில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி சற்றுமுன் வரை ஒரு விக்கெட்டை இழந்து 147 ஓட்டங்களை பெற்றுள்ளது.

தற்போது வரை 2 ஓவர்களை வீசியுள்ள விஜயகாந்த் வியாஸ்காந்த் 13 ஓட்டங்களை விட்டு கொடுத்து விக்கெட் எதனையும் கைப்பற்றவில்லை.

அண்மையில் நடந்து முடிந்த இந்தியா பத்தொன்பதுக்கு வயதிற்குட்பட்ட பயிற்சிப் போட்டியில் நான்கு விக்கெட்டுக்களைக் வியாஸ்காந்த் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:Vijayakanth Viyaskanth,Vijayakanth Viyaskanth,Vijayakanth Viyaskanth,