யாழில் மதுபோதையில் சினிமா பாடல் பாடி சென்றவரை துரத்தி துரத்தி கடித்த நாய்கள்!

0
535
Jaffna Drunken Man Sung Cinema Song Dogs Bite

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் மதுபோதையில் சினிமா பாடல்களை பாடியவாறு வீதியில் சென்றவரை மூன்று நாய்கள் துரத்தி துரத்தி கடித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. Jaffna Drunken Man Sung Cinema Song Dogs Bite

நேற்று முன்தினம் ஞாயிற்று கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 58 வயதான குடும்பஸ்தர் ஒருவரே நாய்களால் குதறப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது ஒருபுறமிருக்க நாய்களின் உரிமையாளர்களும் சிக்கலில் மாட்டியுள்ளார். பொதுமக்கள் நடமாடும் பகுதியில் கொலைவெறித்தனமான வளர்ப்பு நாய்களை வீட்டில் கட்டி வளர்க்கவில்லை என பொலிஸார் நாய்களின் உரிமையாளர்கள் மீது பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இவ்வாறு கட்டாக்காலி நாய்கள் தொடர்பில் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites