முதலையுடன் போராடிய நபர் ; திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதி

0
961
63 year old man injured crocodile attack

தனது கால்நடைகளை மேய்க்கச் சென்ற நபர் கால்வாய் ஒன்றை கடக்க முயற்சித்த போது, முதலை காலை தாக்கியதால் படுகாயமுற்று திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (63 year old man injured crocodile attack)

முதலை இவரின் குதிக்காலின் ஒரு பகுதியை கடித்து துண்டித்துள்ளது. 63 வயதான மற்றும் மூன்று பிள்ளைகளின் தகப்பனான சேருநுவர பிரதேசவாசியான நபரே முதலையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

குறித்த நபர், இளைஞர்சேனை முகாம் அருகில் இருந்த கால்வாயை கடக்க முயற்சித்த போதே இந்த முதலை தாக்கியுள்ளது.

இவர் கையில் இருந்த குத்துக்கோலால் முதலையை தாக்கியும், இளைஞர் சேனை முகாமில் உள்ளவர்களின் உதவியுடன் உயிர் தப்பியுள்ளார். இவர் கரைக்கு வந்த பின்பும் முதலை தாக்க முயற்சி செய்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 63 year old man injured crocodile attack