நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் நாட்டு வளங்களை வெளிநாடுகளுக்கும் தனியார் கம்பனிகளுக்கும் விற்பனை செய்ததே இந்த அரசாங்கத்தின் சாதனை என்று லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் பேராசிரியருமான திஸ்ஸவிதாரண குற்றம் சுமத்தியுள்ளார். professor Tissa Witharana Accusing Maithri Government
மத்தள விமான நிலையம், மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலையம் என்பவற்றை அரசு இந்தியாவிற்கு விற்பனை செய்துள்ளமையை சுட்டிக்காட்டிய அவர் நாட்டின் தேசிய வளங்களை அமெரிக்க மற்றும் இந்திய உள்ளிட்ட நாடுகளுக்கு கொடுத்துவிட்டு நாடு தற்போது சீனாவிடம் கையேந்திக் கொண்டிருப்பதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் மக்களின் சுதந்திரத்திற்கும் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் திஸ்ஸவிதாரண அச்சம் வெளியிட்டுள்ளார்.
எனவே இவ்வாறு தொடர்ச்சியாக தேசிய வளங்கள் விற்கப்படுகின்றமையை அனுமதிக்க முடியாது என தெரிவித்த திஸ்ஸவிதாரண
இது தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் நல்லாட்சி அரசாங்கம் எஞ்சியிருக்கும் ஒன்றரை வருட ஆட்சி காலத்தில் முழு இலங்கையை வெளிநாடுகளுக்கு தாரை வார்த்து விடும் என்றும் திஸ்ஸவிதாரண எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையில் இறப்பு வீதம் அதிகரிப்பு
- இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் காயம்
- சிங்களத் தாயின் கண்ணீரை துடைத்த தமிழ் இளைஞர்கள்; மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
- மரண தண்டனை பெயர் பட்டியலை வெளியிட்ட அதிகாரியை பணிநீக்க நடவடிக்கை
- சிறைக்கூடத்தில் இருந்து பாதாள உலகக் கோஷ்டியை தொடர்புகொண்ட அலோசியஸ்; தகவல் அம்பலம்
- க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
- 100 பவுண் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு