இடுப்புக்கு கீழ் இயங்காத முன்னாள் போராளியை நாயை போல் கட்டிவைத்த பொலிசார்!

0
673

யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளி ஒருவரை மிகவும் கொடூரமாக கட்டிலுடன் விலங்கிட்டு வைத்திருந்த பொலிசாரின் அடாவடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. Police Locked Ex LTTE Jaffna Hospital Issue

குறித்த போராளிக்கு இடுப்புக்கு கீழே உடல் இயங்கும் நிலையில்லாத போதும் பொலிசார் இவ்வாறு நடந்து கொண்டமை பெரும் விசனத்துக்கு உள்ளாகியுள்ளது.

வழக்கு ஒன்றில் கைதாகியுள்ள குறித்த முன்னாள் போராளியை ஆரம்பத்தில் மாற்றுத்திறனாளிக்குரிய அடிப்படை வசதிகள் இன்றி சிறையில் வைத்திருந்ததாகவும், சிறை வைத்தியரிடம் மன்றாடி யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே பொலிசார் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் குறித்த முன்னாள் போராளி தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites