(tamil news house maid missing kuwait searching two years)
வெளிநாட்டிற்கு பணிப்பெண்ணாக சென்றவர் குவேட் விமான நிலையத்தில் காணாமல் போயுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மஹவ – பொல்பித்திகம, கதுருவெவ பிரதேசத்தை சேர்ந்த தம்மிக்கா மெனிக்கே என்ற 46 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது குடும்பத்தில் உள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பணிப்பெண்ணாக குவேட் நாட்டுக்கு சென்றுள்ளார்.
2016 ஆம் ஆண்டு மே மாதம் அவர் குவேட்டுக்கு பயணமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
வெளிநாடு சென்று பல துன்பங்களுக்கு மத்தியில் பணம் சம்பாதித்து, எதிர்காலம் தொடர்பில் கனவுடன் நாடு திரும்புவதற்கு அவர் தீர்மானித்திருந்தார்.
கடந்த 12 ஆம் திகதி இலங்கைக்கு வர தயாரான தம்மிக்கா தொடர்பில் 10 நாட்களாக எவ்வித தகவலும் கிடைக்கிவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
தம்மிக்கா குவைத் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாகவும், அவரை அழைத்து வந்த சாரதி குறித்து சந்தேகம் உள்ளதாக தம்மிக்காவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
(tamil news house maid missing kuwait searching two years)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையில் இறப்பு வீதம் அதிகரிப்பு
- இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் காயம்
- சிங்களத் தாயின் கண்ணீரை துடைத்த தமிழ் இளைஞர்கள்; மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
- மரண தண்டனை பெயர் பட்டியலை வெளியிட்ட அதிகாரியை பணிநீக்க நடவடிக்கை
- சிறைக்கூடத்தில் இருந்து பாதாள உலகக் கோஷ்டியை தொடர்புகொண்ட அலோசியஸ்; தகவல் அம்பலம்
- க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
- 100 பவுண் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு