சிறுவனை தேடும் பணி தொடர்கின்றது – சிறுத்தை தாக்கியிருக்கலாம் என்று சந்தேகம்….!

0
461
missing boy last two days balangoda village people police action search

பலாங்கொட – சமனலவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயதான சிறுவனை தேடும் பணியில், காவல்துறையினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். missing boy last two days balangoda village people police action search

குறித்த சிறுவன் கடந்த இரு நாட்களாக காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை வரை சிறுவன் குறித்த எந்த தகவலும் கிடைக்கபெற வில்லை என்று, மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

இவ்வாறு காணாமல் போயுள்ளவர் சமனலவத்த வித்தியாலயத்தில் தரம் 5இல் கல்வி கற்கும் மாணவன் என தெரிவிக்கப்படுகிறது.

சிறுவனை தேடும் பணியில் பிரதேச மக்களும் இணைந்துள்ள நிலையில், காவல்துறை மோப்ப நாய்களும் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளன.

சமனலவத்த கிராமத்தை அண்டிய வனப்பகுதியில் சிறுத்தை ஒன்று நடமாடுவதாகவும் சிறுவன் சிறுத்தைக்கு இலக்காகி இருக்கலாம் என்றும் சந்தேகம் நிலவுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, காணாமல் போன சிறுவனை தேடும் பணியில் இராணுவத்தினரும் இணைந்துள்ளதாக தற்போது கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன
missing boy last two days balangoda village people police action search

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites