ஆயுதத்துடன் தெமட்டகொடையில் ‘லொக்கா’ கைது!

0
652
Maligawatatte Shooting Woman underworld

மருதானையில் கடந்த வருடம் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று தொடர்பில் ‘லொக்கா’ என்றழைக்கப்படும் ரவீந்திர சஞ்சீவ கைதுசெய்யப்பட்டுள்ளார். Lokka Arrest Dematagoda

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரே இக்கைதை மேற்கொண்டுள்ளனர்.

29 வயதான அவர், தெமட்டகொடையில் உள்ள திரையரங்கமொன்றின் முன்னால் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து துப்பாக்கியும், ரவைகள் சிலவும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் துப்பாக்கிச்சூடு கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு சந்தேகநபர்கள் துப்பாக்கிச்சூட்டை நடத்தியிருந்தனர்.இதில் ஒருவரே ‘லொக்கா’ தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, மூவர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.