தாயின் கள்ளக்காதல்; மகன் கம்பியால் தாக்கப்பட்டு படுகொலை

0
1149
Mother illegal love son assassination

தாயின் கள்ளக் காதலால் மகன் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அம்பன்பொல வலத்வௌ அம்போகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. (Mother illegal love son assassination)

இந்தச் சம்பவத்தோடு தொடர்புடைய 54 வயதுடைய தாயின் கள்ளக் காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த 28 வயதுடைய இளைஞரின் தலையில் காணப்பட்ட காயத்தின் மேல் சந்தேகம் கொண்ட பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் மூலமே தாயின் கள்ளக் காதலனால் இளைஞன் படுகொலை செய்யப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் மூலம் உயிரிழந்த இளைஞர் மற்றும் கைது செய்யப்பட்ட நபருக்கு இடையில் நீண்ட காலமாக நிலவிவந்த முரண்பாடு காரணமாக இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை இன்று மஹவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக அம்பன்பொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த இளைஞரின் உடல் பிரேத பரிசோதனைக்காக குருநாகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Mother illegal love son assassination