வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் கைத்துப்பாக்கி வைத்திருப்பதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் நேற்று இடம்பெற்ற வடக்கு மாகாண சபையின் விசேட அமர்வின் போது தெரிவித்திருந்தார். North Province Minister Anandi Gun Issue Official Answer Ayub Asmin
இவ் விடயம் தொடர்பில் அனந்தி சசிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தொடர்பில் சாடியுள்ளார்.
வடக்கு மாகாணசபை உறுப்பினரான அய்யூப் அஸ்மின் முஸ்லீம் மக்களால் நிராகரிக்கப்பட்டு பின்கதவால் அரசியலுக்குள் பிரவேசித்துள்ள நிலையில் தமிழினத்தினை கூறுபோட முயற்சிப்பதாக அனந்தி சசிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
தன்னிடத்தில் எந்தவகையான துப்பாக்கிகளும் இல்லை என தெரிவித்த அனந்தி சசிதரன் மக்கள் தன்மீது கொண்டிருக்கின்ற அன்பினை ஜீரணிக்க முடியாத அரசியல் காழ்ப்புணர்ச்சியாளர்களே இவ்வாறான பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் அரசியலில் பிரவேசித்த காலம் தொடக்கம் தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவித்துள்ள அனந்தி சசிதரன் எனவே உரிய பாதுகாப்பு வழங்குங்கள் என உரிய தரப்பினரிடத்தில் கோரிக்கைகளை முன்வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அந்தப் பாதுகாப்பினை தான் முழுமையாக நம்பியிருக்கவில்லை என்றும் அனந்தி சசிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாதுகாப்பு அமைச்சிடம் கைத்துப்பாக்கியை பெற்றுக்கொண்டு வடக்கின் மேன்மைத் தன்மையை காட்ட வேண்டிய அவசியம் தனக்கு கிடையாது என்றும் அனந்தி சசிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறான துப்பாக்கி எதனையும் தான் இதுவரையில் பெற்றுக்கொள்ளவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சம்பளம் வேண்டாம் ; நான் தூக்கிலிடத் தயார்
- வவுனியாவில் மாணவி சடலமாக மீட்பு; தற்கொலையா கொலையா? பொலிஸார் விசாரணை
- புற்றுநோயை ஏற்படுத்தும் பூச்சிநாசினிக்கான தடையை நீக்க நடவடிக்கை
- பெற்றோரை பயமுறுத்துவதற்காக கடிதம் எழுதிவிட்டு மாணவன் தற்கொலை
- கொள்ளுப்பிட்டி – தெஹிவளை கடல்பரப்பில் புதிய கடற்கரைப் பூங்கா
- முஸ்லிம்கள் மக்கள் வாக்களிப்பார்கள், பொது பலசேனாவின் ஆதரவாளர் நானில்லை – கோட்டாபய நம்பிக்கை
- அபாயா அணிந்து முகத்தை மூடுவதால் முஸ்லிம் மாணவிகள் தனிமைப்படுத்தப்படுகின்றனர் – தம்பர அமில தேரர் கவலை