வடக்கில் குற்றச்செயல்களுடன் பொலிஸார் தொடர்பு! மஹிந்த குற்றச்சாட்டு!

0
461
Mahinda Rajapaksa Says Police Involved North Province Crimes

நாட்டில் தற்போது சிறுவர்கள்கூட சுதந்திரமாக நடமாட முடியாத நிலைமை காணப்படுவதாகவும் நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் உள்ள அனைவரையும் போதைப்பொருளுக்கு அடிமைப்படுத்தியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். Mahinda Rajapaksa Says Police Involved North Province Crimes

நாரகன்பிட்டி அபயராம விஹாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே மஹிந்த இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

வடக்கில் இடம்பெறும் குற்றச் செயல்களுக்கு பொலிஸாரும் உடந்தையாக உள்ளனர். அது முற்றிலும் உண்மையானது. நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாகச் செயற்பட்டால் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான முறையான திட்டங்களைச் செயற்படுத்தவில்லை.

நாட்டில் போதைப்பொருள் வர்த்தகம் தாராளமாக இடம்பெற்றுவரும் நிலையில் இன்று மரணதண்டனை குறித்து பரபரப்பினை ஏற்படுத்தி தமது தவறுகளை மறைக்கப் பார்ப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தினார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites