மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது

0
316
one person arrest wellawatta special police service galkissa

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கெம்பியன் தோட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். five person arrest illegal jams product bogawanthalava police

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி நேற்று இரவு 8 மணியளவில் பொகவந்தலாவ பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்திய பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விசாரணைகளின் பின் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பொகவந்தலாவ பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
five person arrest illegal jams product bogawanthalava police

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites