மயங்கி விழுந்த இளைஞனுக்கு ஏற்பட்ட விபரீதம்; குடும்பத்தினர் நிர்க்கதி

0
549
26 year old man dies Lindula Police Division

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிப்பக்கலை தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த 26 வயதுடைய இளைஞன் மயக்கமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். (26 year old man dies Lindula Police Division)

குறித்த இளைஞன் லிப்பகலை தோட்ட தேயிலை செடிகளுக்கு கிருமிநாசினி தெளித்துக் கொண்டிருந்தார்.

இதன்போது கிருமிநாசினி துளிகள் காற்றின் மூலம் அவரின் மீது வீசியதால் சுவாசிக்க முடியாத நிலையில் மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து சக தொழிலாளர்கள் மூலம் அவர் லிந்துலை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.

இருப்பினும் அவர் 15 நிமிடங்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 26 year old man dies Lindula Police Division