ஆயுர்வேத நிலையத்தில் நடந்துகொண்டிருந்த சூடு பறக்கும் வியாபாரம்! : 4 பெண்கள்….

0
507

 

ஆயுர்வேத மருத்துவ நிலையம் என்ற பெயரில் இரகசியமாக நடத்திச் செல்லப்பட்ட மருத்துவநிலையமொன்று எதுல் கோட்டையில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. Roundup Brothel Etul-Kotte

இதன்போது 4 பெண்களும், ஆண் முகாமையாளர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வெலிக்கடை பொலிஸாரே இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

அளுத்கடை நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி சுற்றிவளைப்பின் போது கைதுசெய்யப்பட்ட முகாமையாளர் 24 வயதான, இரத்தினபுரியைச் சேர்ந்தவர் எனவும், பெண்கள் 30- 39 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அப்பெண்கள் எஹலியகொட, கொழும்பு 15 , பிலியந்தலை மற்றும் கம்பஹா பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபர்கள் அளுத்கடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.