கிளிநொச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய கட்டிடம் திறந்துவைப்பு!

0
491
North Chief Minister Wigneswaran Open Special Need People Building

கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் புதிய கட்டடம் இன்று வடக்கு மாகாண முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. North Chief Minister Wigneswaran Open Special Need People Building

மாகாண சபை உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று வடக்கு முதலமைச்சரால் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான வை. தவநாதன் மற்றம் அ.பசுபதிபிள்ளை ஆகியோர் தலா 20 இலட்சம் ரூபாவும் ப.அரியரத்தினம் இரண்டு இலட்சம் ரூபாவுமாக 42 இலட்சம் ரூபாவுக்கு கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் அமைக்கப்பட்ட குறித்த புதிய கட்டிடம் திறச்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வடக்கு மாகாண சமூக சேவைகள் மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மாகாண சபை உறுப்பினர்களான தவநாதன் பசுபதிபிள்ளை பிரதேச சபை உறுப்பினர்களான ரஜனிகாந் சிவநேசன் சறோஜாதேவி மற்றும் மாகாண மாவட்ட பிரதேச சமூக சேவைகள் பணிப்பாளர்கள் மாற்றுத்திறனாளிகள் என பலர் கலந்துகொண்டனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites