செங்கோலை உடைக்க முயன்றவர்கள் பாரம்பரியம் பற்றி பேசுவதா? அகிலவிராஜ் காரியவசம் ஆவேசம்!

0
473

தேசிய பாதுகாப்பு மற்றும் பாராளுமன்றத்தின் கோட்பாடுகளை முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீறினார் என்ற விடயங்களை முன்னிலைப்படுத்தி எதிர்தரப்பினர் அரசியல் இலாபம் தேடிக் கொள்வதாக அகிலவிராஜ் காரியவசம் குற்றம் சுமத்தியுள்ளார். Akila Viraj Kariyawasam Open Statement Vijaykala LTTE Issue

அத்துடன் கடந்த காலங்களில் பாராளுமன்றத்தின் செங்கோலை உடைக்க முற்பட்டவர்களும் சபாநாயகரை அவமதித்து பேசியவர்களும் தற்போது நாட்டின் பாரம்பரிய குறித்து கருத்து தெரிவிப்பதாகவும் அகிலவிராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் தற்போது இவர்கள் கடந்து வந்த பாதையை மறந்து பிறிதொருவரின் விடயத்தை பகடைக்காயாக்கி தேசிய பாதுகாப்பு மற்றும் பாராளுமன்றத்தின் கோட்பாடுகள் தொடர்பில் கருத்துக்களை தெரிவித்து அரசியல் இலாபம் ஈட்ட முயற்சிப்பதாகவும் அகிலவிராஜ் காரியவசம் மேலும் தெரிவித்தள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites