றெஜினா கொலை வழக்கு; இன்று மல்லாகம் நீதிமன்றில்

0
670
Regina murder case

சுழிபுரம் காட்டுப்புலம் மாணவி றெஜினாவின் படுகொலை வழக்கு இன்று மல்லாகம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. (Regina murder case Mallakam court)

இதன்போது, றெஜினா சார்பாக சட்டத்தரணி கே.சுகாஸ் இலவசமாக முன்னிலையாகுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைக்கு அடிமையானவர்களால் படுகொலை செய்யப்பட்ட மாணவி றெஜினாவின் படுகொலையைத் தொடர்ந்து பொலிஸ் விசாரணைகள் தேடுதல்கள் நடைபெற்ற போதிலும், இதுவரை அவரது சட்டை, ரை, சப்பாத்து, காலுறை என்பன கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நிலையில், றெஜினா படுகொலையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட முதலாவது சந்தேக நபர் ஜூலை 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, கொலைச் சந்தேக நபருக்கு பிணை வழங்கக்கூடாது எனவும் அவருக்கு அதியுச்ச பட்சத் தண்டனை வழங்கப்படவேண்டும் எனவும் றெஜினாவுக்கு நீதிவேண்டி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் வலியுறுத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத்கத்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Regina murder case Mallakam court