இன்று அதிகாலை 4.45 மணிக்கு வவுனியா, புளியங்குளம் பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Horrible Accident A9 Road Puliyankulam A Driver Dead
இன்று அதிகாலை இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, புளியங்குளம், இராமனூர் பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றது. கொழும்பில் இருந்து கிளிநொச்சி நோக்கி இராணுவத்தினருக்கு பொருட்களை கொண்டு சென்ற கன்டயினர் ரக வாகனமும், பரந்தனில் இருந்து வவுனியா நோக்கி வந்த ஜேர்னி ரக பஸ்சும் ஏ9 வீதி, புளியங்குளம், இராமனூர் பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.
இவ் விபத்து காரணமாக இரு வாகனங்களின் சாரதிகள் உட்பட 5 பேர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் கன்டயினர் ரக வாகன சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நவோதய கிருஷ்ணாவை சுட்டுகொலை செய்யும் அதிர்ச்சி CCTV காணொளி வெளியானது
- மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு அனுமதித்த தாய் பிணையில் விடுவிப்பு
- பொலிஸ் அதிகாரியின் கழுத்தை நெரித்து கொலை செய்த பிக்கு : இரத்தினபுரியில் பதற்றம்
- இணையத்தளத்தில் ஆடுகள் விற்பனை : திருட்டு கும்பல் சிக்கியது
- விஜயகலா கூற்றில் உண்மையுள்ளது! ஒப்புக்கொண்ட மஹிந்த ராஜபக்ஷ!
- பிரபல பாடகியின் கணவருக்கு விளக்கமறியல்
- முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு!
- சிங்கப்பூருக்கு சென்றுள்ள ரணில் அர்ஜுன் மகேந்திரனை அழைத்து வருவார் : ரத்நாயக்க
- விஜயகலாவின் சர்ச்சை : இராணுவம் அதிரடி முடிவு
- பிரபாகரனை தமிழ் மக்கள் அடித்தே விரட்டுவார்கள் : மனோ
- யாழில் சிறுமியை கர்ப்பிணியாக்கிய இளைஞன்; இரு சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்
-
Tamil News Group websites