கள்ளக் காதலனுடன் மனைவி உல்லாசம்; கணவன் வெட்டிக் கொலை (முழு விபரம்)

0
754
40 year old three wheeler driver murder

மூன்று பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய முச்சக்கரவண்டி ஓட்டுநர் ஒருவரை கொலைசெய்து, அவரின் உடலை ஏரி ஒன்றின் அருகில், முச்சக்கர வண்டியில் கைவிடப்பட்டிருந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. (40 year old three wheeler driver murder)

இந்தச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதியின் மனைவியையும் அவளின் கள்ளக் காதலனையும் கிரிபத்கொடை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இரண்டு லொறிகளின் உரிமையாளர் என்றும் சந்தேகநபரான உயிரிழந்தவரின் மனைவி வத்தளை பிரதேசத்தில் தொலைபேசி நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தனது கணவன் பிள்ளைகளுடன் உறங்கும் போது, இனந்தெரியாத நபர்கள் தனது கணவனை கொலை செய்துவிட்டு, அறையை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரித்தாகவும் வீட்டில் படிந்திருந்த இரத்தக் கறையை அழிப்பதற்கு தண்ணீர் கொடுத்துச் சென்றதாகவும் சந்தேக நபரான பெண் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த முறைப்பாட்டில் சந்தேகம் கொண்ட பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்து, விசாரணை நடத்தியுள்ளனர்.

இதன்போது, தனது கணவன் நித்திரை கொண்டிருந்த போது திருட்டுத்தனமாக தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து, வேறு அறையில் இருவரும் ஒன்றாக இருந்ததாகவும் கணவன் திடீர் என அறைக்குள் வந்ததாகவும் பொலிஸில் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

இதன்போது, தனது கள்ளக்காதலன் அவளின் கணவனை கொலை செய்துள்ளதாகவும் பொலிஸ் மேற்கொண்ட விசாரணையில் வெளிவந்துள்ளது.

மேலும், அவரின் உடலை முச்சக்கரவண்டியில் கொண்டு சென்றதாகவும், தான் வீட்டில் படிந்திருந்த இரத்தக் கறை அடையாளங்களை தண்ணீர் ஊற்றி, கழுவி விட்டு பொலிஸில் போலியாக முறைப்பாடு கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 40 year old three wheeler driver murder